தமிழ் நாடு போல் இங்கு வேறு இல்லை
தமிழன் என்பதற்காக இல்லை இந்த குறிப்பு
இது வந்தாரை வாழவைக்கும் தலம்
ஏனென்றால் இங்கு ஏமாளிகள் ஏராளம்
ஏறி மிதிபவர்கள் தாராளம்
உரிமைக்கு குரல் குடுக்க யோசிக்கும் இனம் இது இன்று
ஏனெனில் ஒற்றுமை இல்லை இங்கு
சாதி மத பிளவுகள் உண்டு பல
குடி தண்ணீருக்கு அடித்து கொள்ளாமல்
ஜாதிக்கு அடித்து கொள்பவர்கள் ஆனா நிலை வருத்தம்
அவரவர் வாழ்வில் பிரச்சனை இல்லெனில் இங்கு யாவரும் நலம்
பொது பிரச்சனை எனில் அடடா எல்லோரும் மாயம்
நாம் எவ்வளவு சுயநல வாதிகள் ஆகி விட்டோம் என்பதை
பறைசாற்றுகிறது இது
வந்தேறிகள் இங்கு பல உண்டு
அட்டைகள் போல இந்த மண்ணிலிருந்து அத்தனையும் உறிந்து எடுத்துவிட்டார்கள்
வாழ வைத்தது தமிழனும் அவனது பண்பும்
வாழ மறந்தான் தமிழன்
அடுத்தவருக்கு எடுப்பாய் இருந்தே ஒழிந்தான்
எடுப்பார் கைபிள்ளையாய் வாழாமல் இருகின்றான்
இங்கு நல்லதோர் பாதைகாட்டி இல்லை
அறிவுக்குருடர்களும் தற்குறிகளும் மிதமிஞ்சி உள்ளனர்
இந்நாள் நடிகர் முதல் முன்னாள் முதல்வர் வரை
இங்கு எவனும் தமிழன் அல்ல
பச்சை மஞ்சள் கருப்பு என்று தமிழனுக்கு
அடையாளங்கள் காட்டும் சிலரால்
அவமானத்தில் இன்று தமிழ் இனம்
தமிழ் என்பது இனமே அல்ல இது ஒரு வாழ்கை வழி
இப்படி தான் உயிர் வாழ வேண்டும் என்று உலகிற்கு எடுத்துக்காட்டிய
முதல் நாகரீகம் கொண்டது நம் தமிழ் மக்கள்
இன்று உண்மையான தமிழனை
எங்கே தேடுவது என்று தான் தெரியவில்லை
எங்கே தமிழன்?
You are absolutely correct! Every Tamilian is absolutely Unique, like everyone else!
ReplyDelete