Saturday, January 23, 2010

வாகன நிறுத்தம்

நான்கு சக்கர வாகனம் பழுதடைந்ததால் பஸ்சில்
போக வேண்டிய நிர்பந்தம்
பேருந்து நிறுத்தத்தில் ஒரு பிச்சைகாரன் அவன் வேலையில் மும்முரமாய்
கல்லூரி மாணவர்கள் அவர்களின் சினிமா விவாதத்தில் மூழ்கி கிடந்தனர்
யாரோ ஒருவர் எவரோடோ கைபேசியில் வணிகம் பேசிக்கொண்டிருந்தார்
பூக்காரி கர்ம சிரதையோடு பூ கட்டி கொண்டுரிக்க
போக்குவரத்து காவலர் லஞ்சவேட்டையில் திகைக்க
எவருக்குமே அங்கு இருந்த பூனைக்குட்டியின் தாயை காணும் என்ற தேடலை கவனிக்க நேரமில்லை

No comments:

Post a Comment