Tuesday, January 19, 2010

எங்கோ நினைவு

குறுந்தகடில்  a r  ரஹ்மான் பாடல் ஒலிக்க

ஓரிடத்தில் நிற்காத மனம்
ஆபீஸ் பஸ்சில் பயணம்
வழி நெடுக வேலைக்கு செல்வோர் முகங்கள்
கவிதை எதாவது தோன்றுகிறதா என்று யோசனை
எதை பற்றி எழுதுவது
காதல் என்ற கடல் பற்றி விவாதிப்போமா
அளவிற்கு அதிகமாக வாசனை திரவியம் பூசிய பக்கத்து இருக்கை பெண்
பள்ளி நண்பர்கள்
வெகுநாள் கழித்து பார்க்கும் தோழி
நேற்றிரவு பார்த்த நெடுந்தொடர் பற்றி விவாதிக்கும் நண்பிகள்
இவ்வளவு பேரா நம் சிந்தனையை திசை திருப்புவதற்கு
மறுபடியும் கவிதை பற்றி நினைக்க நினைத்து தோற்று போனவுடன் தோன்றியது
அடடா மதிய சாப்பாடு எடுத்து வர மறந்துவிட்டோம் என்று

No comments:

Post a Comment