Tuesday, January 12, 2010

அறிவு சுடரின் அறைகூவல்

நான் எப்பொழுதும் அணையாமல் எரிந்து கொண்டிருக்கின்றேன்
எனக்கு எண்ணெய் ஊற்றுவது உங்கள் பொறுப்பு
நான் உங்கள் எல்லோரக்குள்ளும் வசிக்கின்றேன்
என்னை தூண்டுவது உங்கள் இஷ்டம்
உங்கள் மனம் போன போக்கில் நீங்கள் போனால் நான் வெகு விரைவில்
அணைந்து விடுவேன்
உங்கள் ஆன்மாவில் வசிப்பவன் நான்
என்னை பரம்ஜோதியாய் சுடர் விட்டு வளர்ப்பதும்
குளிர வைப்பதும் உங்கள் கையில்
குடத்திலிட்ட விளக்கல்ல நான்
பார்த்துகொள்வீரா

No comments:

Post a Comment