Saturday, January 23, 2010

நிதர்சனம்

அடுத்தவர் தலை தூக்கும் போதெல்லாம் மிதிப்பதென்பது
இப்பொழுது எல்லோராலும் ஏற்கப்படும் நிலை ஆகிவிட்டது
அடுத்தவரை அழித்தால் தான் வாழ முடியும் என்றால் தப்பில்லை
என்கிறது இன்றைய சமுதாயம்
இங்க மிருகத்தோல் போத்தி அலைகின்றோம் நாம்
தூங்கும் போது கூட ஒரு கண்ணை திறந்து கொண்டு தூங்காவிட்டால்
பிணம் என்று எரித்து விடுவார்கள்
இந்த நிலையில் ஒன்று மட்டும் நன்றாக புலப்படுகிறது
நாகரீகம் என்ற பேரில் நாம் செய்கின்ற அநியாயங்கள் எல்லாம்
நமக்கு திரும்பி வர போகிறது
எப்பொழுது என்பது மட்டுமே பதிலற்ற கேள்வியாய் நிற்கின்றது

No comments:

Post a Comment