நான் மயிருக்கு தான் மதிக்க படுகின்றேன்
ஆடிபெருக்கு போது நான் தேவை
மற்ற நாளில் நான் கழிவுகளுக்கு வீடாய் இருக்கின்றேன்
என்னை பேணி பாதுகாக்க இங்கு யாரும் இல்லை
கடைசி துளி வரை உறிந்து எடுத்த பிறகும்
என்னடியில் இருக்கும் மண்ணை கூட விடுவதில்லை
இந்த மானம் கெட்ட மனிதர்கள்
நதி எங்கே செல்கிறது
இப்பொழுதாவது சென்று கொண்டிருகிறது
பின்னொரு நாளில் இங்கே நதி பாய்ந்து கொண்டிருந்தது என்று
பலகை வைத்து வரலாறு ஆகி விடும் அபாயம்
No comments:
Post a Comment