Wednesday, January 20, 2010

சொந்தத்தின் எதிர்பார்ப்பு

பெரியசாமி இறந்தார் இன்று
ஊரெங்கும் கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகள்
கூரை வேய்ந்த வீட்டு வாசல்
சிதறி கிடக்கும் நாற்காலிகள்
தெரு முழுக்க உதிரி பூக்கள்
சோகம் கலையாத உறவினர் முகங்கள்
நடுவே துள்ளி ஓடி விளையாடும் சிறுவர்கள்
தாதா இறந்ததை அறியாத வயதில்
கருமாதிக்கு கரி சோறு இருக்குல்ல என்று வினவும் ஆர்வ கோளாறுகள் 
இப்பொழுது  தான் அருகில் வசிக்காத சொந்தங்களின் குசலங்கள்
இந்த இறப்பும் சொந்தங்களை நெருங்கி வரச்செய்யும் ஓர் சம்பவம்
நவீன வாழ்வில் சாவும் ஒரு சந்திக்கும் இடம் தூரத்து சொந்தங்களுக்கு
இது மாதிரி அடிகடி சந்திசிகிட்ட எவ்ளோ நல்ல இருக்கும் என்று நினைக்கும் நபர்கள்
இறந்தது அவர்கள் தந்தை என்று கூட நினைவின்றி

No comments:

Post a Comment