Tuesday, January 19, 2010

எதை நீ யோசிகின்றயோ அதாகவே மாறுகின்றாய்

கவிதைகளுக்கும் இரவுக்கும் என்ன தொடர்பு
அதிகாலையில் பிறக்கிறது மூளையில் மனதில் நிறைய சிந்தனை
குவித்து வைக்க இடமில்லை
எழுதி தீர்க்க நேரமில்லை
எலி  போட்டியில் சிக்கிய படி அந்த நாளுக்கான அவசரத்தில் மூழ்குகின்றேன்
முங்கி வெளியே வரும் போது சிந்தை காய்ந்து ஓய்ந்து தேய்ந்து
வறண்ட நிலம் போல கட்சி தருகின்றது
நீரூற்ற நினைத்தால் ஒருமனதாக்க பெரும் பாடு
எண்ணற்ற சிந்தனை வந்து செல்கின்றது
இதோ எதையோ பதிய நினைத்து எதையோ பதிந்து கொண்டிருகின்றேன்
கன்னம் வருடியபடி
எங்கு ஆரம்பித்தேன் என்று நினைப்பதற்குள் ஆயிரம் கோடி நினைவுகள்
வந்து ஓடிக்கொண்டு தான் இருகின்றது
ஒரு வழியாக கண்டுபிடித்து விட்டால் அப்பொழுது தான் நினைவிற்கு வருகிறது
நேற்றிரவு நன்றாக உறங்கியது
தூக்கம் கெடுத்து தான் கவிதை வரயனுமா என்ற யோசனையில் முற்று புள்ளி வைக்கின்றேன்
அனைவருக்கும் நல் இரவு

No comments:

Post a Comment