Tuesday, January 19, 2010

மன்னிப்பு

நான் பச்சை மரத்தில் அடித்த ஆணிகளை நீக்கி பார்க்கும் பொழுது
உலகம் தெரிகிறது அந்த ஓட்டையில்
பச்சை மரங்களிடம் நான் மண்டியிட்டு மன்னிப்பு கேட்கின்றேன்
இனி ஒரு சுடு சொல் சொல்ல மாட்டேன்
எல்லோரிடமும் எதிர்பார்ப்பின்றி அன்பு செலுத்த ஆயத்தமாகிறேன்
பழைய நினைவுகள் வந்து சென்றாலும்
சொல்லாலோ செயலாலோ சுட்டது சுட்டதுதான்
காயத்திற்கு மருந்து அன்பு மட்டுமே
நான் அறிந்தும் அறியாமலும் செய்த பிழைகளுக்கு அடிமனதிலிருந்து மன்னிக்க வேண்டுகிறேன்

No comments:

Post a Comment